ஹார்பின்: சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் வடகிழக்கே ஹார்பின் நகர் சின்பேய் மாவட்டத்தில் உள்ள நான்கு மாடி கொண்ட ஹோட்டல் ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கிய 18 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.