புதுதில்லி: இந்திய ராணுவத்துக்கு ரூ.46 ஆயிரம் கோடிக்கு தளவாடங்கள், ரூ.21 ஆயிரம் கோடிக்கு 111 ஹெலிகாப்ட்டர்களை வாங்க மத்திய பாதுகாப்பு துறையின் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தில்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இந்திய ராணுவத்துக்கு ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கும், இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 111 ஹெலிகாப்டர்களை வாங்கவும், ரூ.3,364 கோடியில் ராணுவத்துக்கு தேவையான பீரங்கிகள் வாங்கவும், சுமார் ரூ.24,879 கோடி மதிப்பிலான சில கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.