மூன்று மாதங்களுக்குள் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும்: வினோத் ராய்

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடத்தப்படும் என சிஓஏ தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்குள் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும்: வினோத் ராய்


பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடத்தப்படும் என சிஓஏ தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய வரைவு சட்ட திட்டம் தொடர்பான, நீதிபதி லோதா குழு பரிந்துரைகளுக்கு சிறிய மாற்றங்களுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், சிஓஏ தலைவர் வினோத் ராய், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மூன்று மாதங்களுக்குள் (90 நாள்) நடத்தப்படும். மூன்று மாதங்களில் தேர்தல் என்பது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்டுள்ள காலக்கெடுவாகும். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்னர் சிஓஏ விலகிக்கொள்ளப்படும்.  

மேலும், ‘நவம்பர் மாதம் பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெறும். பிசிசிஐயின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், முடிவுகள் நேர்மையாக எடுக்கச் செய்வதுமே எங்கள் கடமை என ராய் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com