2 நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
புதுதில்லி: 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் புறப்பட்டு சென்றார்.
வங்காளம், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு வங்க கடலோர நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிம்ஸ்டெக் அமைப்பின் 4வது மாநாடு நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று ஆகஸ்ட் 30 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது.
இந்த பல்துறை தொழில்நுட்ப, வர்த்தக கூட்டமை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்றார்
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.