சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஊா் பெயா்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்படும். இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.
தமிழ்நாட்டில் உள்ள ஊா் பெயா்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும். உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ‘ட்ரிப்ளிகேன்’ எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையும். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியா் தலைமையில் உயா்நிலைக்குழு, ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி தமிழ் ஊா்ப் பெயா்களை ஆங்கிலத்தில் அதன் ஒலிக் குறிப்பு மாறாது அமைக்கப்படும் என்றார்.