காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் என தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் போது அந்த மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாகிஸ்தானை சேர்ந்த கைதி நவீத் என்பவர் தப்பிச் சென்றுள்ளார்.
அவருக்கு பாதுகாப்பாக நின்றிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.