கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் காலமானார்.
உடல்நலக் குறைவால் நெய்யூர் மருத்துவமனையில் ஜான் ஜேக்கப் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜாக் ஜேக்கப், வாசன் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய போது காங்கிரஸில் இருந்து விலகி அதில் இணைந்தார். 2016- ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் கிள்ளியூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஜான் ஜேக்கப் இன்று காலமானார்.