ஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள்: கனிமொழி 

மதுரையில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.  
ஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள்: கனிமொழி 

மதுரையில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.  

அப்போது பேசிய அவர் நாத்திக அரசியலை அகற்றி ஆன்மிக அரசியலை கொண்டுவருவதே பாஜகவின் நோக்கம் என்றார். மேலும் இது பெரியார் வளர்த்த மண் அல்ல பெரியாழ்வார் வளர்த்த மண் என்றார். இதேபோல் அண்ணா வளர்த்த தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்த தமிழ் என்றும் அவர் கூறினார். 

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி இது ஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள். மக்களுக்கு உழைத்த தலைவர்களின் பூமி இது, தமிழர்களின் பூமி இது என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com