இசை கல்லூரிக்கு நியாயமான முறையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை என்று பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது நாட்டுப்புற பாடலை பாடும் கிராமத்தான் என்பதால் தனக்கு துணைவேந்தர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இருந்திருந்தால் இசை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை எனக்கு அளித்து இருப்பார். இப்போதெல்லாம் இசை கல்லூரியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது'' என்று ஆவேசமாக பேசியுள்ளார்.