இனி திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக இராமநாதபுரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேசுவுள்ளதாகவும், கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது என தெரிவித்திருந்த கமல்ஹாசன், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக, தமிழகத்தை மாற்றிக் காட்டுவதே தமது கனவு என்றும் நற்பணி மன்றங்கள் மூலம் அங்குமிங்கும் செய்து வந்த பணிகளை, தற்போது மையத்தில் நின்று மேற்கொள்ள இருப்பதாக கமல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.