சென்னை: ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக மருத்துவர் பாலாஜி புதிய தகவல் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கைரேகைப் பெறப்பட்டது என்று மூன்றாவது முறையாக இன்று விசாரணை ஆணையம் முன்பு ஆஜரான மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற முதலவர், தலைமைச் செயலாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஆவணம் வரவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான அரசு மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே 2 முறை மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இன்று மூன்றாவது முறையாக ஆஜரான அவர் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக புதிய தகவலை கூறியுள்ளார்.
மீண்டும் தேவைப்பட்டால் மருத்துவர் பாலாஜியை விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள் பிப்-20 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் 21 ஆம் தேதி முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும், 23 ஆம் தேதி ஓட்டுநர் ஐய்யப்பன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.