காஞ்சிபுரம் மாவட்டம் அருகேயுள்ள போந்தூர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை, ஊழியர்கள் சுத்தம் செய்ய முயற்சித்த போது, விஷவாயு தாக்கியது.
விஷவாயு தாக்கியதில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் மேலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.