புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழகம், மேலும் 72 டி.எம்.சி. நீரை பெற்றுதர கோரியது. ஆனால் 192 டிஎம்சி நீரையே அளிக்க முடியாது என கர்நாடகா தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகிறது.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.