உலக அளவிலான சந்தையின் ஆரோக்கியமான போக்கால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து, பங்குச் சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
மும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 141 புள்ளிகள் அதிகரித்து 34,297 புள்ளிகளாக நிறைவடைந்தது.
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 10,618 புள்ளிகள் வரை உயர்வடைந்து, இறுதியில் 10,548 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.