பங்குச் சந்தை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 12% குறைந்தன

 மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  141.52  புள்ளிகள் உயர்ந்து 34,297.47 புள்ளிகளாக உள்ளன. 
பங்குச் சந்தை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 12% குறைந்தன

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  141.52  புள்ளிகள் உயர்ந்து 34,297.47 புள்ளிகளாக உள்ளன. 

அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 44.60 புளிகள் உயர்ந்து 10,545.50 புள்ளிகளாக உள்ளன. எனினும் மும்பை பங்குச் சந்தையில் சிறு நிறுவனங்களின் பங்குகள் 0.46 சதவீதமும் குறு நிறுவனங்களின் பங்குகள்  1.27 சதவீதம் குறைந்தன. 

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி பரிவர்த்தனையை தொடர்ந்து அதன் பங்குகள் கிட்டத்தட்ட 12% குறைந்தன. இரண்டாவது அமர்வில் 1.77 பில்லியன் டாலர்  குறைந்தது.

இதற்கிடையில்  பிஎஸ்இ-ல் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி மற்றும் எஃப்எம்சிஜி ஆகியவற்றின் பங்கு வர்த்தகம் அதிகரித்தன. டெலிகாம், மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் பங்க்கு வர்த்தகம் அதிகரித்து காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com