காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில் தனியார் பேருந்தும் - சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு வேனில் பயணித்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் - சரக்கு வேனும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில், சரக்கு வேனில் பயணித்த 7 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டம் சிறுனை மல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு சரக்கு வேனில் திரும்பிக்கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழந்த இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.