ஜோஹன்னஸ்பர்க்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவரில் 203 ரன்களை குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது.
இது, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எஞ்சியுள்ள டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களம் காண உள்ளன.
இந்நிலையில், முதல் டி20-யில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது.
கோலி 26 ரன்களும், பாண்டியா 7 பந்தில் 13 ரன்னும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
பின்னர் களமிறங்கியுள்ள தென் ஆப்பிரிக்கா 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.