நீரவ் மோடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது 

நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
நீரவ் மோடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது 

நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவருக்கு நெருக்கமானவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில்  மும்பை கிளையில் வங்கியின்  அந்நியச் செலாவணிப்பிரிவு தலைமை மேலாளர் பெச்சு திவாரி, மேலாளர் யஷ்வந்த், ஏற்றுமதி அதிகாரி பிரபுல் சாவந்தையும் சிபிஐ கைது செய்துள்ளது.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com