கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூயூ இன்று அமிர்தசரசில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்தார். ஆறு அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் வர்த்தகம், விவசாயம் மற்றும் சேவைத் துறையின் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக நேற்று ஜஸ்டின் ட்ரூயூ அவரது குடும்பத்தினர் அம்ரித்ஸரில் உள்ள தங்க கோவில் சாமிதரிசனம் செய்தார். கோயிலின் சன்னதி மண்டபத்திற்குள் ரூதேயூ கௌரவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜிட் சஜ்ஜன் சிங் பஞ்சாப் வந்திருந்தபோது முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.