இந்தோனேசியாவில் கோழி போல் முட்டையிடும் 14 வயது சிறுவன்: மருத்துவர்கள் அதிர்ச்சி

இந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவன் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 
இந்தோனேசியாவில் கோழி போல் முட்டையிடும் 14 வயது சிறுவன்: மருத்துவர்கள் அதிர்ச்சி

இந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவன் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் என்ற  14 வயதுடைய சிறுவன் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருவதாக பெற்றோர்கள் கூறிவருகின்றனர். அந்த சிறுவன்  கடந்த மூன்று ஆண்டுகளாக 20 முட்டைகளை போட்டுள்ளான். இது மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அக்மலின்  தந்தை கூறுகையில், அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முட்டையிட்டு வருகிறான், இதுகுறித்து நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம். 
 
தற்போது கூட மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகள் போட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான், அதை நான் உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த முட்டையை பரிசோதிக்க சொன்னோம். அதன் மருத்துவ அறிக்கை என்ன வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அது கோழி முட்டை என்பது மட்டும் தெரிந்தது. மேலும் அந்த சிறுவனின் எக்ஸ்-ரே புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்

ஆனால் மருத்துவர்களோ இது நிச்சயமாக இருக்க முடியாது, மனிதன் உடலில் முட்டை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, என்றும் மருத்துவர்கள் அச்சிறுவனை முழுமையாக பரிசோதித்து வருவதாக தனியார் மருத்துவமனை  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com