முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் தான் இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக அணிகள் இணைப்புக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்றும், முதல்வர் தரப்பு எம்எல்ஏக்களில் உள்ள சிலீப்பர் செல்கள் சரியான சமயத்தில் வெளியே வருவார்கள் என்றும் தினகரன் தொடர்ந்து கூறி வந்தார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏவான பிரபு இன்று அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுஅறுதிப் பெரும்பான்மையுடன் தான் இருக்கிறது என்றும் அதிமுக அணி தூங்கவில்லை. தினகரன் அணிதான் தூங்குகிறது என்றார்.
மேலும் தினகரனை சந்தித்த பிரபு, மேலும் சிலர் அணி மாறுவார்கள் என்ற கருத்து மறுப்பு தெரிவித்த ஜெயக்குமார், அணி மாறமாட்டார்கள்.
தனிப்பட்ட வெறுப்புகளுக்காக கட்சி மீதோ, தலைவர் மீதோ காட்டக்கூடாது என தெரிவித்தார்.