அமைதி, வளம், அரசியல் விழிப்புணர்வு அனைத்தும் மக்களுக்கு கிடைக்கட்டும்!

2018ஆம் ஆண்டு பிறப்பை புத்தாண்டாகக் கொண்டாடும் தமிழகத்திலுள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதி, வளம், அரசியல் விழிப்புணர்வு அனைத்தும் மக்களுக்கு கிடைக்கட்டும்!

2018ஆம் ஆண்டு பிறப்பை புத்தாண்டாகக் கொண்டாடும் தமிழகத்திலுள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலரும் நினைவுகள் எப்போதுமே மகிழ்ச்சியானவை. ஆனால், 2017-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள் எதுவும் அப்படிப்பட்டவை அல்ல. அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் நடந்த அனைத்து நிகழ்வுகளும் நல்வாய்ப்புக்கேடானவை; அவை அனைத்தும் மறக்கப்பட வேண்டியவை. வறட்சி, புயல் என இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒன்றைக்கூட தமிழக அரசு செய்யவில்லை. துக்ளக் பாணியில் கோமாளித்தனங்களும், மார்கோஸ் பாணியில் ஊழல்களும், பண்டைக்கால சிற்றரசர்கள் பாணியிலான அடிமைத்தனங்களும் மட்டுமே ஓராண்டு ஆட்சியில் நிரம்பியிருந்தன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, போராடிய மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என போதாமைகளின் பெட்டகமாகவே 2017-ஆம் ஆண்டு அமைந்துவிட்டது. தகுதியற்றவர்களை மீண்டும், மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதன் தீய விளைவுகளைத் தான் தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்தனர். இந்த நிலை உடனே மாற்றப்பட வேண்டும்.

கடந்த ஆண்டின் காயங்களுக்கு புதிய ஆண்டு மருந்து போடும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அமைத்தும் புத்தாண்டில் மக்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். இவையெல்லாம் கிடைக்க அவசியத் தேவை அரசியல் விழிப்புணர்வு என்பதால் அதை அடைய மக்கள் இந்த நாளில் உறுதியே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com