தற்போதைய செய்திகள்
சென்னையில் புத்தாண்டு விபத்து கடந்தாண்டை விட குறைவு: சென்னை காவல்துறை தகவல்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பாக 11
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 179 பேர் காயமடைந்திருப்பதாகவும், 2 பேர் பலியானதாகவும் தெரியவந்தள்ளது.
காயமடைந்தவர்களில் 166 பேர் அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் டந்தாண்டை விட இந்த ஆண்டு குறைவு எனவும் சென்னை காவல்துறை கூறியுள்ளது.