புனேவில் நடந்த தலித்துகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மகாராஷ்டிராவில் பதற்றம் ஏற்பட்டது. மும்பை நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
புனேயில் உயர் ஜாதியினருக்கு எதிரான போராட்டத்தின் 200-வது ஆண்டு வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது வெற்றி தினம் கொண்டாடிய தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து மும்பையின் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புனேயில் நடந்த கலவரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.