மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான சட்ட மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை இன்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமளிக்கு இடையே மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்புமாறு திரிணமூல் காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த சட்ட மசோதாவை இன்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமளிக்கு இடையே மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்தார்.