புதுதில்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகளின் குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசித்து வருகிறார்.
இதனிடையே மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
சக நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தலைமை நீதிபதி அட்டார்னி ஜென்ரலுக்கு அழைப்பு விடுத்திருப்பது எதற்காக என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் தலைமை நீதிபதி செய்தியாளர்களை சந்திகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.