ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி சோதனை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீடு, நூங்கம்பாக்கம் எல்டோரா அருகே உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் தில்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

காரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று காலை 7.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீட்டில் ப.சிதம்பரம் இல்லை. அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com