ஓசூர் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி

ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக
ஓசூர் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற கார் ஓசூர் அருகே உள்ள சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசுப்பேருந்துடன் மோதியதில் அரசு பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் வந்த 5 பேரும், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். பேருந்து பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com