பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இன்று (ஜனவரி 14) கட்சி தொண்டர்களை சந்தித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை.
இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, இன்று தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க கோபாலபுரம் இல்லத்தில் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.