சேலம்: காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் நடப்பது மதச்சார்பற்ற ஆட்சி தான் என்பதில் சந்தேகமில்லை என்றும் கட்சியை உடைக்க, ஆட்சியைக் கவிழ்க்க சிலர் முயன்றார்கள். அவர்கள் கனவு பலிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரி கர்நாடகாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 7 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு சாதகமானதாக அமையும். சேலம் விமான நிலையத்தில் விரைவில் விமான சேவை தொடங்கும் என்றும் கூறினார்.