குடியரசு தினத்தன்று தில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.