தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்து வருகிறது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில், 335 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 307 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்தது.
டி வில்லியர்ஸ் (80 ரன்கள்) , எல்கர் (61 ரன்கள்) ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 91.3 ஓவர்கள் தாக்கு பிடித்த தென் ஆப்பிரிக்க அணி, 258 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம், 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.