முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று வங்காளதேசத்தில் உள்ள சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நான்குநாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்கா நகரில் உள்ள தனது இல்லத்தில் அவருக்கு நேற்று மதியவிருந்தளித்தார்.
இதையடுத்து இன்று காலை சிட்டாகாங் நகருக்கு சென்ற பிரணாப் முகர்ஜி சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட கெளரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.