ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த தமிழக மீனவர்களை 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
16 மீனவர்களுடன் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்றுள்ளனர்.