டிஸ்பூர்: அசாம் மாநிலம் கோக்ராஜார் பகுதியில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பூகம்பத்தால் உயிருக்கோ, உடைமைகளுக்கோ சேதாரம் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.