பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி வரும் 31-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து டிடிவி.தினகரன் பேசினார். அப்போது முதியோர் உதவித்தொகையை அரசு சரியாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சர்களின் தரம் தாழ்ந்து போய்விட்டதாகவும் அவர் கூறினார்.