அசாமில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

அசாம் மாநிலத்தில் மைபோங்கில் நேற்று நடைபெற்ற பந்த்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 
அசாமில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

ஹப்லாங்: அசாம் மாநிலத்தில் மைபோங்கில் நேற்று நடைபெற்ற பந்த்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 

பெருநகர நாகலிம் திட்டத்தில் டிமா ஹாஸோ மாவட்டத்தை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை பந்த் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பிரிவினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டும் ரயிலை தடுத்து நிறுத்தினர்.

அப்போது போராட்டத்தை ஒடுக்கவும், கலைந்து செல்வதற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அசாம் டிஜிபி முகேஷ் சஹாய் உறுதிப்படுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com