கடந்த சில நாட்களில், சீனாவின் பல மாநிலங்களில் கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜியாங்சு மாநிலத்தின் சுச்சோவின் பழைய நகர் பகுதியில் பனிப் பொழிவால் நகர் முழுவதும் மூடப்பட்டன.
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சங்கிஷாவில் உள்ள ஹுங்குவா சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பனிப்பொழிவினால் உறைநிலை ஏற்பட்டது.
1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பனி அகற்றும் வேலைக்கு ஒரு டஜன் உபகரண வாகனங்கள் அனுப்பப்பட வேண்டியிருந்தது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமையன்று இரவு சர்வதேச விமான நிலையத்தில் 95 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 1,200 பயணிகள் தவித்தனர்.