சோபியான்: தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தின் குண்டாலன் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை முதல் பாதுகாப்பு படை வீர்ர்களுக்கும், பயங்ரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதிகளுடனான இந்த துப்பாக்கி சண்டையில் 34 ஆர் ஆர் பிரிவைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸார் (சிஆர்பிஎஃப்) ஈடுபட்டுள்ளனர்.