5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் மலையோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு


சென்னை: நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் மலையோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலையோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். மாலை, இரவில் சில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com