புதுதில்லி: உள்துறை அமைச்சக மூத்த நிர்வாகிகளுடன் 3 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வங்கதேசம் செல்கிறார்.
இந்த பயணத்தின் போது வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்திக்கும் ராஜ்நாத் சிங், பயங்கரவாத எதிர்ப்புக்கு ஒத்துழைப்பு, இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபட முயற்சிக்கும் தீவிரவாத அமைப்புகள், எல்லை தாண்டி கள்ள நோட்டுகள் அதிகரித்தல் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். மேலும் ரோஹிங்யா பிரச்னை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 13-ஆம் தேதி முதல் 15 வரை 3 நாள் வங்களதேசம் செல்லும் ராஜ்நாத் சிங்குடன், உள்துறை அமைச்சக மூத்த நிர்வாகிகளும் இடம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.