திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக அவ்வப்போது பேரருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து நேற்று முதல் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இன்றும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.