பாக்தாத்தில் ஆயுத கிடங்கில் குண்டுவெடிப்பு: 14 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா மசூதி அருகே ஆயுத குழு ஒன்று வீடு ஒன்றில்
பாக்தாத்தில் ஆயுத கிடங்கில் குண்டுவெடிப்பு: 14 பேர் பலி


பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா மசூதி அருகே ஆயுத குழு ஒன்று வீடு ஒன்றில் ஆயுதங்களை சேமித்து வைத்து ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளது.

இந்நிலையில், ஆயுத கிடங்கில் உள்ள ஆயுதங்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளன. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் அருகில் இருந்த ஐந்து வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

இதையடுத்து வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com