அரசு இ-சேவை மையங்கள் சனிக்கிழமையன்று இயங்காது: தமிழக அரசு தகவல்

அரசு இ-சேவை மையங்கள் சனிக்கிழமையன்று (16.6.2018) அன்று சர்வர் பராமரிப்பு காரணமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு இ-சேவை மையங்கள் சனிக்கிழமையன்று இயங்காது: தமிழக அரசு தகவல்

சென்னை:  அரசு இ-சேவை மையங்கள் சனிக்கிழமையன்று (16.6.2018) அன்று சர்வர் பராமரிப்பு காரணமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு  மின்  ஆளுமை  முகமையின்  கீழ்  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டம்  மற்றும் கிராம தொழில் முனைவோர் அரசு இ சேவை மையங்கள் இயங்கி  வருகின்றன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 10,423 அரசு  இ சேவை மையங்கள்  இயங்கி வருகின்றன.

சர்வர் பராமரிப்பு  பணி  காரணமாக 16.06.2018 (சனிக்கிழமை) அன்று  காலை முதல்  மாலை  வரை அரசு இ சேவை மையங்கள் இயங்காது எனத்  தெரிவிக்கபடுகின்றது. அரசின் இ சேவை மையங்கள் 18.06.2018, திங்கள்கிழமை அன்று முதல் வழக்கம்  போல்  இயங்கும். இவ்வாறு, அரசு செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com