மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க 3 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசு சார்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குத் தொடா்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக்கிளை, 2017 டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடா்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறைச் செயலா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை எந்த இடத்தில் அமைப்பது என்பதை முடிவு செய்ய மத்திய அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜூன் 14-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.