செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூரில் நைஜீரிய நாட்டு மாணவியிடம் மோசமாக நடந்துக் கொண்ட 2 இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
நைஜீரிய நாட்டைச்சோ்ந்த மாணவி வண்டலூா் சிங்கார தோட்டம் தெருவில் தனது சகோதரியுடன் தங்கி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அந்த மாணவி மற்றும் அவரது சகோதரியும் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அவர்களை தொடா்ந்து வந்த இரண்டு இளைஞா்கள் மோசமாக நடந்து கொண்டனர். இதனால் பயந்து ஓடிய மாணவிகளை பார்த்த பொதுமக்கள் அந்த 2 இளைஞா்களையும் பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸார் நடத்திய விசாரணையில் இளைஞா்கள் 2 பேரில் ஒருவா் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த கொண்டமங்களம் பகுதியைச் சோ்ந்த தமிழரசன்(27), மற்றொருவா் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயவேலு(24) என்பது தெரியவந்தது.