தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்

சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி.யை முற்றுகையிட்டது உள்ளிட்ட வழக்குகளில் கைது
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்

சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி.யை முற்றுகையிட்டது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூா் பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் ஜாமீன் கோாி மனுத்தாக்கல் செய்த நிலையில், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராடிய போது இந்திய இறையாண்மைக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக அவா் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்குகளில் ஜாமீன் கோாி வேல்முருகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் வேல்முருகன் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அப்போது வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகா்கோவிலில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com