ஐதராபாத்: ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் நிலவி வருவதை அடுத்து, மாணவ-மாணவியரின் நலன் கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து விடுமுறை பிறப்பித்துள்ளது மாநில அரசு.