ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றன.
புல்வாமா மாவட்டத்தில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து இன்று அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றது.
சிரிகுப்வாரா பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியானதை அடுத்து பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.