திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானப் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
கோலாலம்பூரில் இருந்து வந்த அப்துல் சமத், அமீர், மகாரூஃப் ஆகியோரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.